தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரமாக மும்பையில் வசிக்கும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
அந்தவகையில் அபிஷேக் சர்மா இயக்கும் ராம்சேது படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா உறுதியானது. அதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 45 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து ராம்சேது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.