‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். “அந்தாதூன்” திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது. அதனையடுத்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.
இப்படத்திற்கு இந்தியில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் நடிகர் பிரசாந்த், சிம்ரன் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்த வருகின்றனர். “அந்தகன்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரசாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கி வருகிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி இப்படத்தில் நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் அவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#andhadhun #tamilcinema #tamilmovie #hindiremake #bollywood #kollywood #cinema #cineupdate #prasanth #simran #priyaanand #cinema news #cineupdate