தமிழில் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர், இதில் ப்ரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, வினய், உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கே,ஜே,ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் பணிகள் முடிந்து மார்ச் 26 ஆம் தேதி டாக்டர் திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில் எதிர்வரவிற்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, டாக்டர் திரைப்படம் ரம்ஜான் தினத்தையொட்டி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை -3’ உருவாகி வருகிறது. ஆர்யா நாயகனாக நடித்துள்ளார். இதில் ஆண்ட்ரியா, ராசி கண்ணா கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சுந்தர் சி, இறுதிக் கட்டப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனையடுத்து அரண்மனை 3 படத்தை ரமலான் தினத்தையொட்டி திரைக்குக் கொண்டுவர சுந்தர் சி திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இருபடங்களும் ஒரே தினத்தில் வெளியாகும் பட்சத்தில் ரமலான் பண்டிகைக்கு ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.