கடந்த 2014 ஆண்டு இயக்குநர் சுந்தர் சி அரண்மனை என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில், ஹன்ஷிகா, சந்தானம், மனோ பாலா வினய் ராய், ராய் லட்சுமி உள்ளிட்டோர் நடித்து வெளியான இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. பேய் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் வெற்றியை தொடரந்து அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும், படம் மாபெரும் வெற்றிபெற்றது. இவ்விரு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘அரண்மனை’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இதில், கதாநாயகனாக ஆர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் கட்டி வருகிறது படக்குழு
இந்த நிலையில், ‘அரண்மனை 3’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.