தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஹரி. இவர் சிங்கம், சாமி, பூஜை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடைசியாக சாமி 2 படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
அதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் “அருவா” என்ற படத்தினை இயக்க ஒப்பந்தமானார், ஆனால் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிய ராஜ் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவிருப்பதால், இந்தப்படம் தள்ளிபோடப்பட்டது.
இந்நிலையில் இயக்குனர் ஹரி நடிகர் அருண்விஜய் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இதில் அருண் விஜக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இவர்கள் இருவரும் ‘மாஃபியா’ படத்தில் இணைத்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தில் பிரகாஷ்ராஜ், ராதிகா சரத்குமார், அம்மு அபிராமி, யோகி பாபு, ஜெயபாலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
அதனையடுத்து கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார். ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘அருண் விஜய் 33’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
#arunvijay #abirami #priyabhavani #hari16 #av33 #prakashraj #jiprakash #tamilthisai #tamilcinema