இந்தியாவில் மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட திரைப்படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌலி இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தம்மன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என பலர் நடித்திருந்தனர். பாகுபலி திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகி வசூலில் சாதனை படைத்தது.
பாகுபலி திரைப்படத்தின் முதல் பாகம் 2015-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தெலுங்கு மொழியில் எடுக்கப்பட்ட பாகுபலி தமிழ்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வெளியானது. இந்த படத்தின் போர் காட்சிகள் தரமான கிராஃபிக்ஸ்கள் உடன் தயாரிக்கப்பட்டிருந்தது.
பாகுபலி படத்தின் ஆரம்ப காட்சியில் ரம்யா கிருஷ்ணன் தான் இறக்கும் போதும் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்றுவார். அந்த குழந்தை தான் மகேந்திர பாகுபலி. ரம்யா கிருஷ்ணன் நீரில் மூழ்கியபடியும் அவரது ஒரு கையால் குழந்தையை தூக்கிபிடித்தப்படி இருக்கும் போஸ்டர் அப்போது மிகவும் பிரபலமானது.
இந்த திரைப்படத்தில் மகேந்திர பாகுபலியாக நடித்தது தன்வி என்ற பெண் குழந்தை. அந்த சிறுமியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தன்வி தற்போது பள்ளிக்குச் செல்கிறாள். அந்த சிறுமி தற்போது UKG படிக்கிறார். இந்த பெண்ணின் சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அவரது புகைப்படங்களைப் பார்த்தவர்கள், குழந்தைக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.