தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
அனிதா சம்பத் ஊடகங்களில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் பெற்றார். அதனை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்துவந்த நிலையில் கடந்த வாரம் போட்டியில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில், அனிதா சம்பத்தின் தந்தை ஆர்.சி.சம்பத் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். இவர், தனது மகனுடன் இணைந்து சீரடி சென்றுள்ளார். அங்கு தரிசனத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பும் வழியில் ரயிலிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பவ இடத்திலேயே மரணமடைந்த அவரது உடல், பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை கொண்டு வரப்படுகிறது. பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத்தின் திடீர் மரணம் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.