இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரமாக மும்பையில் வசிக்கும் பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
நடிகர் அமீர்கான், மாதவன் உள்ளிட்ட பல நடிகர்கள் கொரோனா தொற்றால் பாதித்துள்ளனர். அந்த வகையில் மும்பையில் வசிக்கும் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், அனைவருக்கும் வணக்கம். எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவர்கள் அறிவுரையின்படி கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி எனது வீட்டில் சிகிக்சை எடுத்து வருகிறேன். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகை ஆலியா பட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் கங்குபாய் கத்தியாவாடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
#aliabhatt #Bollywood #madhavan #Mumbai #Maharashtra #Cinema #Cinenews #CinemaTrending #tamilThisai CoronaPositive #covidTest #CoronaVirus