சினிமா

காத்திருப்பதை தவிர எங்களால் எதுவும் செய்யமுடியாது; ராஷி கண்ணா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை ராஷி கண்ணா தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்க நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

அதனையடுத்து விஷால், ஜெயம்ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் சினிமா துறையில் கதாநாயகிகளின் நிலையை பற்றி பேசியியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,”எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. ஆனால் அந்த மாதிரி வேடங்கள் கிடைக்க அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். கதாநாயகியாக எங்களுடைய சினிமா வாழ்க்கை எங்கள் கையில் இல்லை. அது இயக்குநர்கள் கையில்தான் இருக்கிறது.

ALSO READ  ஹிந்தி உலகில் தடம் பதிக்க போகும் மாஸ்டர் படம்….

அவர்கள் மிகச் சிறந்த கதாபாத்திரங்களை உருவாக்கிவிட்டால் போதும். மற்றவை தானாக அமைந்துவிடும். அதன் பிறகு நாங்களே நினைத்தாலும் தப்பாக எதுவும் செய்ய முடியாது. நூறு படங்கள் வந்தால் அதில் ஒன்றிரண்டு படங்களில்தான் கதாநாயகிக்குப் பெயர் கிடைக்கிற கதாபாத்திரங்கள் அமையும். அந்த மாதிரி கதாபாத்திரங்களுக்காக காத்திருப்பதை தவிர எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது” என்றார்.

#RaashiKhanna #TamilThisai #Tamilcinema #tamilmovie #cinema #Actress #cinemaupdate cinemanews #Cinemachance #tamilactress #teluguactress


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“விரைக தமிழா! ஆஸ்கர் அதிக தொலைவில்லை; வைரமுத்து ட்வீட் !

News Editor

வெளியானது “ஈஸ்வரன்” படத்தின் அப்டேட்…! 

News Editor

அதர்வாவுடன் கைகோர்க்கும் வாணி போஜன்

Admin