இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அண்மைக்காலமாக திரை பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றால் பதித்து வருகின்றனர். அந்த வகையில் நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நடிகர் செந்திலுக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவரை தொடர்ந்து அவரின் மனைவி, மகன், மருமகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர்கள் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
#Corona #Coronavirus #TamilThisai #TamilMovie #Senthil #Coronapositive #Covid19 #Cinema #Cinemaupdate