கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் இருந்து உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. அதனையடுத்து உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை மக்களுக்கு செலுத்தும் நடவடிக்கைகளில் தீவிரம் வருகின்றனர். கொரோனா தாக்கம் குறைந்து இருந்த நிலையில் தற்போது மீண்டு வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், ஆலியா பட் நடித்து வரும் ‘கங்குபாய் கதியாவாதி’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்திவந்தார். இதனையடுத்து, இப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சஞ்சய் லீலா பன்சாலிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகை ஆலியா பட், ரன்பீர் கபூருடன் இணைந்து ‘ப்ரம்மாஸ்திரா’ படத்தில் நடித்து வருகிறார். இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகை ஆலியா பட் அவசர அவசரமாக தன்னைத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறார்.