பிரபல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் ‘துல்கர் சல்மான்’ நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் “ஹே சினாமிகா”. இப்படத்தில் காஜல் அகர்வால், அதிதி ராய் உள்ளிட்டோர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தினை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பிருந்தா மாஸ்டர் தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருந்து வந்தார். தற்போது இந்த படத்தினை இயக்குவதன் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். “ஹே சினாமிகா” படத்தின் படப்பிடிப்பு முன்னரே துவங்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா நெருக்கடி காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டதால் “ஹே சினாமிகா” படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
அதனையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு தளர்வு அளித்தது. அதனையடுத்து படக்குழு படத்தின் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் படக்குழு இன்று “ஹே சினாமிகா” படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பினை முடித்துள்ளது.
இந்த தகவலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இப்படத்தின் ரிலையன்ஸ் நிறுவனம் முதன் முறையாக தமிழ் படத்தினை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.