கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருந்த படம் ‘த்ரிஷ்யம்’. பின்னர் இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து இந்த படத்தின் மலையாள வெற்றியை தொடர்ந்தது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழில் ரிமேக் செய்யப்பட்டு இங்கேயும் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியது. அதனையடுத்து இந்த படத்தை சினமா ரசிகர்களும் விமர்சகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப்படம் முதல் பாகத்தை விட கூடுதல் சிறப்பாக உள்ளது என விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இதனையடுத்து இப்படத்தை ரீமேக் செய்ய பிறமொழித் தயாரிப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
அந்தவகையில், ‘த்ரிஷ்யம் 2’ படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. தெலுங்கிலும் ஜீத்து ஜோசப் இயக்க, வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அண்மையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ‘த்ரிஷ்யம் 2’ தெலுங்கு ரீமேக்கில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். மலையாளத்தில் மோகன்லால் தரப்பு வக்கீலாக நடித்திருந்த நடிகை சாந்தி பிரியாவின் கதாபாத்திரத்தில் பூர்ணா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.