தேனி:-
சென்னையிலிருந்து தேனிக்கு வந்த திரைப்பட இயக்குநர் பாரதிராஜா செவ்வாய்க் கிழமை அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
தேனி மாவட்ட எல்லைகளில் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுத்தி, 14 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சென்னையிலிருந்து தேனிக்கு வந்த பாரதிராஜா தேவதானப்பட்டி அருகே மாவட்ட எல்லையில் மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டார். இதில், அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இருப்பினும், கொரோனா பாதிப்பில் சிவப்பு நிற மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னையிலிருந்து அவர் தேனிக்கு வந்திருப்பதால் தேனி, என்.ஆர்.டி.நகரில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.
இதற்கான அடையாள நோட்டீஸை நகராட்சி சுகாதார அலுவலர்கள் அவரது வீட்டுச் சுவரில் ஒட்டியுள்ளனர்.