சினிமா

“தமிழ்த்தாய்க்கு சோறு போடும் பிள்ளை” வைரமுத்துவை பாராட்டிய பிரபல இயக்குநர் 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஓ.என்.வி. விருது. இவ்விருது மலையாள கலைஞர்களும் ஒருவரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குறுப் அவர்களின் நினைவாக கடந்த 2017 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஓ.என்.வி விருது அகில இந்திய அளவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் தேசிய விருதாக கருதப்படுகிறது.  தற்போது இந்த விருது தமிழ் இலக்கியவாதி கவிஞர் வைரமுத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. 

இந்த விருது ஒரு சிலை மற்றும் ஒரு தகுதி பட்டயம் அத்துடன் 3 லட்சம் ரொக்க பணம் வழங்கப்படும். சிறந்த மலையாள படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இவ்விருது முதல் முறையாக மலையாளி அல்லாத இலக்கியவாதிக்கு கொடுப்பது இதுவே முறையாகும். 

ALSO READ  இந்தி வெப் சீரிஸில் இணையும் விஜய் சேதுபதி...! 

கவிஞர் வைரமுத்துக்கு விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து திரைபிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவுக்கு இயக்குநர் பேரரசு  வாழ்த்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட  சமூகவலைத்தள பதிவியில்,

கவிப்பேரரசுக்கு
கிடைத்த ஓஎன்வி விருது
தமிழகத்துக்கு
கேரளம் தந்த  அங்கீகாரம்!
மலையாளம்
தமிழுக்கு தந்த கௌரவம்!
கருத்த கவிஞரே
பெருத்த சந்தஷோம் தமிழருக்கு!
உன் குளத்தில் – சிலர்
கல்லெறிந்த காலம் வேறு!
இன்று
உன் குளத்தில்
பொற்தாமரை பூத்திருக்கு!
தமிழ் உன்னை வளர்த்தது
பதிலுக்கு நீயும்
தமிழ் வளர்க்கிறாய்!
நலிந்துகொண்டிருக்கும்
தமிழ்த்தாய்க்கு
சோறுபோடும் பிள்ளைகளில்
நீயும் ஒரு பிள்ளை
உனக்குண்டு
என்றும் தமிழ்த்தாயின் வாழ்த்து!” எனப் பாராட்டியுள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகை வனிதாவின் பிரம்மாண்டமான குபேர பூஜை:

naveen santhakumar

பிரபல இயக்குநருக்கு கொரோனா; தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை !

News Editor

யூடியூபில் சாதனை படைத்த ’ரெளடி பேபி’

naveen santhakumar