இயக்குனர் பிரபு சாலமன் தமிழில் மைனா, சட்டை, கும்கி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதன் மூலம் தமிழில் முன்னணி இயக்குனராக இருந்து வருகிறார். இவரின் இயக்கத்தில் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான தொடரி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. அதனையடுத்து நடிகர் ராணா நடிப்பில் காடன் என்ற படத்தினை உருவாக்கிவருகிறார்.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.விஜயகுமார் இயக்கும் ‘அழகிய கண்ணே’ படத்தில் பிரபு சாலமன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தில் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் நடிகராக மாறிய இயக்குனர்கள் செல்வராகவன், கெளதம் மேனன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர்களின் வரிசையில் தற்போது பிரபு சாலமன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.