தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
தென்னிந்திய திரையுலகில் முன்னணி இயக்குனரான ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூத்த மகளான ஐஸ்வர்யா டாக்டராக உள்ளார்.
இந்நிலையில் இவருக்கு புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித்துக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 27) மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது .
ரோகித்தின் அப்பா தாமோதரன் தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் விளையாடும், மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளராவார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரி அணி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித், அந்த தொடரில் அதிகபட்சமாக மும்பைக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் அடித்திருந்தார்.
இவர்களது திருமணத்தை மகாபலிபுரத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடத்துகிறார் ஷங்கர். பிரபல கலை இயக்குனர் முத்துராஜ் இந்த அரங்கை அமைத்து வருகிறார். இவர் 2.0 படத்தின் கலை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.