ஆனந்த் ஷங்கர் தமிழில் இருமுகன்,நோட்டா, அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார் இவர் தற்போது நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரையும் வைத்து எனிமி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருநாளினி ரவி நடித்து வருகிறார். ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடித்து வருகிறார்.
அதனைத் தொடர்ந்து நடிகர் ஆர்யா படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். தமன் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷால் ஆர்யா நடடிப்பில் வெளியான அவன் இவன் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் எனிமி படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஹைதரபாத்தில் முடித்த படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை துபாயில் முடித்துள்ளது. இந்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ‘எனிமி’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான அனைத்து காட்சிகளையும் நடிகர் ஆர்யா நடித்து முடித்துள்ளதாக படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர் தெரிவித்துள்ளார்.