நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான “பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். நவாசுதீன் சித்திக் ஆலியா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்த வந்தனர். அதனையடுத்து ஆலியா விவாகரத்து கேட்டு நடிகர் நவாசுதீன் சித்திக்க்கு நோட்டீஸ் அனுப்பிருந்தார். இது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் நவாசுதீன் சித்திக், ஆலியா ஜோடிகள் விவாகரத்து முடிவை கைவிட்டு தற்போது இணைந்து வாழ முடிவெடுத்துள்ளனர். இது குறித்து ஆலியா கூறும் போது, அண்மையில் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதையறிந்த நவாசுதீன் சித்திக் என்னை பரிவுடன் கவனித்தார், தனிமைப்படுத்துதலுக்கு உள்ளானததால் இரு குழந்தைகளையும் அவர் அன்புடன் பார்த்துக்கொண்டார், அப்போதுதான் அவரின் மறுபக்கம் தெரிந்தது, அதானல் குழந்தைகளின் நலன் கருதி இந்த முடிவை நாங்கள் இருவரும் இணைந்து எடுத்துள்ளோம். என கூறினார்.