மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.
அதனையடுத்து குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர். அத்தனையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது. அரசு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளக்கூறி வற்புறுத்துவது தற்கொலைக்குச் சமம். மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது ஜனநாயகமே. அவர்களை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்” எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
#farmerprotest #gvprakash #farmeract #tamilthisai #centralgovt