சினிமா

“விவசாயிகள் ஏர்முனை கடவுள்”; இணையத்தில் வைரலாகும் ஜி.வி பிரகாஷ் ட்வீட் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில்  இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.  

அதனையடுத்து  குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர். அத்தனையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.  

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில்  பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், போராடுவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது. அரசு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். புதிய சட்டங்களை ஏற்றுக்கொள்ளக்கூறி வற்புறுத்துவது தற்கொலைக்குச் சமம். மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராடுவது ஜனநாயகமே. அவர்களை “ஏர்முனை கடவுள்” என்றழைத்தால் மட்டுமே நமை படைத்தவனும் மகிழ்வான்” எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ  தோனி பட புகழ் நடிகை திஷாவிற்கு கொலை மிரட்டல் :

#farmerprotest #gvprakash #farmeract #tamilthisai #centralgovt


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வரின் கொரோனா நிதிக்கு ரூ.1 லட்சம் நிதி அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

News Editor

நடிகை கங்கனா ரணாவத் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்:

naveen santhakumar

ஆபாச கேள்விக்கு பதிலளித்த நடிகை நீலிமா ராணி…!

News Editor