பிரேமம் பட புகழ் சாய் பல்லவி தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். தமிழிலும் தனுஷ் சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நடன நிலைச்சியில் போட்டியாளராக பங்கேற்று, அதன் பின்னர் மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி அனைவரின் மனங்களையும் கவர்ந்தார் சாய் பல்லவி. தற்போது பாவக்கதைகளில் வெற்றிமாறன் இயக்கியுள்ள அந்தாலஜி என்ற ஒரு பகுதியில் சாய் பல்லவி நடித்துள்ளார் . இது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் இதுதொடர்பாக பலருக்குப் பேட்டியளித்து வருகிறார். அப்போது மீடூ இயக்கம் ஒருமுறை அவரை காப்பாற்றியதாகத் தெரிவித்துள்ளார். அதில், “ஒரு படத்தின் இயக்குனர் முத்தக் காட்சியில் நடிக்கும்படி என்னை வற்புறுத்தினார். நான் அப்படி நடிக்க முடியாது என்று கூறினேன் . ஆனாலும் தொடர்ந்து அந்த முத்தக்காட்சியில் நடிக்கும்படி என்னை வற்புறுத்தி வந்தார்.
அந்த நிலையில் தான் படத்தின் கதாநாயகன் உடனே இயக்குனரை பார்த்து இந்த பிரச்சனையை மீ டூ இயக்கத்துக்கு கொண்டு சென்றால் என்ன செய்வீர்கள் ?என்று கேள்வி எழுப்பினர் அதனை தொடர்ந்து இயக்குனர் முத்தக்காட்சிகளில் நடிக்கும்படி என்னை ஏதும் கேட்கவில்லை என்றும், மீ டூ வின் உதவியால்தான் அன்று நான் தப்பித்தேன் என்று கூறினார்