தமிழ் நடிகர் ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் நடிகரான இவர் ‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்பு நட்பே துணை, நான் சிரித்தாள் போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் ஹிப் ஹாப் ஆதி.
இந்நிலையில்தான் நடிகர் ஹிப் ஹாப் ஆதியின் அடுத்த படத்தினை அறிமுக இயக்குனர் அஷ்வின் ராம் இயக்க சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு ‘அன்பறிவு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா நடிக்கிறார். மேலும் விதார்த், நெப்போலியன், சாய்குமார், ஊர்வசி, விஜய் டீவி தீனா, சங்கீதா மற்றும் பல முக்கிய நடிகர்களும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ப்ரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘அன்பறிவு’ படத்தின் இயக்குனர் அஷ்வின் ராம் இந்த திரைப்படம் நகைச்சுவை அம்சங்களும், உறவுகளிடையேயான உணர்வுகளையும் கமர்ஷியல் அம்சத்துடன் கலந்து சொல்லும். நடிகர் ஆதி ஏற்கும் கதாபாத்திரம் அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும்,மற்றும் அவரின் வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும்” என்றார்.
இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் டி. ஜி.தியாகராஜன் கூறுகையில், எங்களின் அடுத்த படைப்பான அன்பறிவு படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மிக குறுகிய திரைப்பயணத்தில் குடும்பங்களுக்கு பிடித்த நடிகராக ஹிப் ஹாப் ஆதி மாறியிருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகள் அவரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உள்ளது .
நடிகர் ஆதியை இந்த திரைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களிலும் கொண்டு சேர்க்கும். இந்தப் படம் அவரது திரை வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கும். இயக்குநர் அஷ்வின் ராம் முதன்முதலாக திரைக்கதையை கூறியபோது எனக்கு பெரும் ஆச்சர்யம் அளித்தது. கதையில் குடும்பங்கள் ரசிக்கும் அனைத்து அம்சங்களும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. தரமான கதையும் அதனோடு கமர்ஷியல் அமசங்களும் நிறைந்திருந்தது.நடிகர் நெப்போலியன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார், என்றும், மேலும் அன்பறிவு திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமையும் என கூறினார். .