இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் மற்றும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜா, நந்திதா உள்ளிட்டோர்கள் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு தமன் இசைமைத்துள்ளார்.
அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த படத்தில் ஒரு மாத காலகட்டத்தில் நடித்து முடித்துள்ளதால். அவரின் சினிமா வாழ்க்கையில் மிக குறுகிய காலகட்டத்தில் நடித்துள்ள படமாக இது பார்க்கப்படுகிறது. அதனையடுத்து, இப்படத்தின் இசை வெளியீடானது நேற்று முன்தினம் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழா மேடையில், சிம்புவைப் பார்த்து ‘ஐ லவ் யூ மாமா’ எனக் கூறும்படி இயக்குனர் சுசீந்திரன், கதாநாயகி நிதி அகர்வாலிடம் கேட்டுக்கொண்டார். அவர் தயங்கி நின்றபோது மீண்டும் மீண்டும் அவரை சுசீந்திரன் வற்புறுத்தியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்துப் பலரும் தங்களது அதிருப்தியைச் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வந்தநிலையில், இயக்குனர் சுசீந்திரன் இவ்விவகாரம் தொடர்பாக விளக்கமளித்து காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், “பாடல் வெளியீட்டு விழாவில் ஜாலியாகப் பேசிய விஷயம். படத்தில் சிம்புவை விரட்டி விரட்டி நிதி அகர்வால் காதல் செய்வதுபோல காட்சிகள் உள்ளன. ‘ஐ லவ் யூ மாமா… ஐ லவ் யூ மாமா’ என்பது போலத்தான் அவருடைய நடவடிக்கைகள் இருக்கும். சிம்பு விலகி விலகிப் போவார். படத்தின் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்துதான் அப்படி சொல்லச் சொன்னேன். ஆனால், நிறைய பேர் தவறாகப் புரிந்துகொண்டார்கள். அதற்கான விளக்கமாக இதைச் சொல்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
#nidhiagaewal #silambarasaTR #tamilcinema #eswaran #Tamilthisai