இந்தியாவில் பல மொழித் திரைப்படங்களில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். குறிப்பாக இவர் தமிழில் ஒஸ்தி, சந்திரமுகி, அருந்ததி போன்ற பல திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமூக வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா அதிகமாக இருந்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை தொலைத்து சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. அதனையடுத்து அவர்களை நடிகர் சோனு சூட் தன்னுடைய சொந்த செலவில் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊர்களுக்கு வர முடியாமல் தவித்த மாணவர்களையும் தன்னுடைய சொந்த செலவில் தாயகம் அழைத்து வந்தார்.
பின்னர் ஏழைப் பெண்களுக்கு ட்ராக்டர் வாங்கித் தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுத்துள்ளார். சமூகவலைதளத்தில் உதவி என்று யார் கேட்டாலும் அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் முகம் சுளிக்காமல் செய்து வருகிறார். மலைவாழ் மக்களுக்கு செல்போன் வாங்கி கொடுத்து அதற்கென பிரத்யேக டவர் ஒன்றினை தன்னுடைய சொந்த செலவில் அமைத்துள்ளார். இப்படிப் பல சமூக செயல்களை செய்துவரும் சோனு சூட்டுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்று இவருக்கு தெலங்கானா மாநிலத்தில் கோவில் கட்டி பூஜை செய்கின்றனர்.
அதனையடுத்து தெலங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர் தனது சாலையோர கடைக்கு நடிகர் சோனு சூட் பெயரை வைத்துள்ளார். இது சமூக வலைதளத்தில் ட்ரெண்டானதன் மூலம் சோனு சூட் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து அந்தக் கடையை தேடிக் கண்டுபிடித்து கடைக்கு நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சோனு சூட். அதனை தொடர்ந்து அவரை பார்க்க மக்கள் கூடியதால் சற்று ஏற்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.