நடிகர் சோனு சூட் சமூக வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்தவர். அதனால் பல பேர் இவரை ரியல் ஹீரோவாக பார்த்து வருகின்றனர் இன்னும் சில பேர் ஒரு படி மேலே சென்று அவருக்கு கோவில் கட்டி வணங்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட பல மக்களின் துயரைத் நீக்கியுள்ளார் நடிகர் சோனு சூட். இவர் தற்போது தெலுங்கில் கொரடலா சிவா இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் “ஆச்சாரியா” படத்தில் சோனு சூட் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் ஆச்சாரியா படத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு 100 ஸ்மார்ட்போன்களை இலவசமாக வழங்கியுள்ளார். அதனையடுத்து அவர்கள் அனைவரும் சோனு சூட்டிற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் இவரின் சேவை மனப்பான்மையை பாராட்டும் விதமாக ஆந்திராவில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி நிறுவனம் தங்களின் கலை மற்றும் மனிதநேய துறைக்கு நடிகர் சோனு சூட்டின் பெயரை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#sonusood #acharya #siranjeevi #tamulthisai #telugumovie