கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியானது.
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது. இப்படம் ஐஎம்டிபி தளத்தில் முதல் இடத்தைப் பிடித்தது.
இந்நிலையில், உயரிய விருதாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு ஜெய் பீம் திரைப்படம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா வெளியிடும் கூழாங்கல் திரைப்படமும் கோல்டன் குளோப் விருதுக்காக அனுப்பப்ட்டுள்ளது.
இந்த இரண்டு படங்களில் எந்தப் படம் தேர்ந்தெடுக்கப்படும் என்பது குறித்து விரைவில் தெரியவரும்.