தமிழகத்தில் அழிந்து வரும் கோவில்களை பாதுகாப்பதற்காக அவற்றை பக்தர்களிடம் கொடுக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கூறியிருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “11,999 கோவில்கள் ஒரு கால பூஜைகூட நிகழாமல் அழிந்து வருகின்றன. 34,000 கோவில்கள் 10,000க்கும் குறைவான வருட வருவாயுடன் போராடுகின்றன. 37,000 கோவில்களில் பூஜை, பராமரிப்பு, பாதுகாப்பிற்கு ஒருவர் மட்டுமே உள்ளார். கோவில்களை பக்தர்களிடம் விடுங்கள். தமிழக கோவில்களை விடுவிக்கும் நேரமிது” என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் பலரும் ஜக்கியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சந்தானம் தற்போது ஜக்கியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “‘பூஜை நடைபெறாமல், முறையாக பராமரிக்கப்படாமல் பல கோவில்கள் இருப்பது வருத்தமளிக்கிறது. ஜக்கி வாசுதேவ் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். கோவில்களை பக்தர்களிடம் விட்டுவிடுங்கள்’ என குறிப்பிட்டுள்ளார்.