பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான அணில் பனசூரன் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
பிரபல மலையாள பாடலாசிரியரான அனில் பனசூரன், 2005-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மகள்க்கு’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிற்கு அறிமுகமானார். இவர், கடந்த 2017-ஆம் ஆண்டில் வெளியாகி இந்தியா முழுவதும் வைரலான ‘ஜிமிக்கி கம்மல்’ என்ற பாடலின் பாடலாசிரியர் ஆவார். மேலும், மலையாள இலக்கிய உலகில் முக்கிய கவிஞராகவும் அறியப்பட்டு வந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அணில் பனசூரன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டிருந்தார். நேற்றிரவு திடீரென சிகிச்சை பலனளிக்காமல் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை மருத்துவர்கள் அறிவித்தனர். இதனால், மலையாள திரையுலகமே யா திருச்சியில் மூழ்கியுள்ளது.
மேலும் பாடலாசிரியர் அணில் பனசூரனுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சிறந்த பாடல் ஆசிரியருக்கான ஃபிலிம் ஃபேர் விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
#anilpanachooran #jimikkikammal #malayalamovie #tamilthisai