சின்னத்திரை நடிகை சௌஜன்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட தொலைக்காட்சி நடிகை சவுஜன்யா, பெங்களூரின் தெற்கு மாவட்டத்தில் உள்ள பெரியபெல்லே என்ற கிராமத்தில் உள்ள கும்பலகோடு பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில், யாரும் இல்லாத சமயத்தில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடகு மாவட்டத்தின் குஷாலநகரைச் சேர்த்த சௌஜன்யா, வளர்ந்து வரும் நடிகையாவர். இவர் டிவி தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார். சீரியலை தாண்டி சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் திடீர் என தன்னுடைய தாய் தந்தைக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்னுடைய இறப்பு குறித்து சௌஜன்யா எழுதி வைத்துள்ள கடிதத்தில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. என் சாவுக்கு நானே பொறுப்பு. அப்பா-அம்மா என்னை மன்னித்து விடுங்கள்.
தன்னுடைய தந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதோடு தன்னால் வாழ முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தன்னுடைய கடிதத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தற்போது கன்னட திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதிலேயே நடிகர்கள் மற்றும் நடிகைகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.