சினிமா

கார்த்தி படத்தில் பணியாற்றிய சிம்பு; அதிக கவனம் பெரும் “சுல்தான்” படம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த ரெமோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தினை நடிகர் கார்த்தியை வைத்து “சுல்தான்” என்ற புதிய படத்தினை இயக்கி வருகிறார். 

இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அவரை தொடர்ந்து யோகி பாபு, பொன்னப்பாலம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்தியின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு தயாரிக்கிறார்.

இதன் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துப் பணிகளும் நிறுத்தப்பட்டன. ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின், மீண்டும் ஆரம்பித்த இதன் படப்பிடிப்பு பணிகள் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்த நிலையில், இதன் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ALSO READ  ஒரு மாத ஊரடங்கு; இன்று முதல் அமலுக்கு வருகிறது !

அண்மையில் படத்தின் முதல் பாடலான ஜெய் சுல்தான் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இன்று மாலை 7 மணிக்கு சுல்தான் படத்தின் இரண்டாவது பாடலான “யாரையும் இவளோ அழகா” என்ற பாடலை வெளியிடவுள்ளது படக்குழு. இந்த  பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார். விவேகா எழுதியிருக்கும் இந்தப் பாடலுக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். முதல் முறை நடிகர் கார்த்தி படத்தில் சிம்பு பாடியுள்ளதால் படத்தின் மீதும் பாடலின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘மறக்கமுடியாத அந்த நாட்கள்’ விவேக் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் ! 

News Editor

பேட்மிட்டன் வீராங்கனையை  கரம் பிடித்தார் விஷ்ணு விஷால் !

News Editor

‘விஜய்’பட காமெடி நடிகர் ‘பெஞ்சமின்’ மருத்துவ உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்

News Editor