விக்னேஷ்சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற ஒரு புதிய படத்தினை உருவாக்கயுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரவும் மற்றும் ஒரு கதாநாயகியாக சமந்தாவும் நடிக்க உள்ளார்கள்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் போடா போடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார்.அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து வெளியான நானும் ரவுடி தான் படம் ஒரு வெற்றிப்படமாகவே அமைந்தது. அந்த படத்தில் நயன்தார காது கேட்காத பெண்ணாக நடித்து இருப்பார். காமெடி கலந்த கமர்சியல் படமாக வெளிவந்த இத்திரைப்படம் மக்கள் மத்தில் பெரும் வரவேற்பினை பெற்றது. விக்னேஷ் சிவன், விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய மூன்றும் பேரின் கூட்டணி மீண்டும் இணைத்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை அடுத்த தாம்பரம் சானடோரியம் ஜி எஸ் டி சாலை அருகே உள்ள வெட்டு வசதி வரியா குடியிருப்பு பகுதியில் நேற்று காலை இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் நாடியை நயன்தாரா சம்பத்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் நயன்தாராவை நேரில் பார்க்க அங்கு பொதுமக்கள் குவிந்ததால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பிற்காக காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறப்படுகிறது எனினும் நயன்தாராவை பார்க்க மக்கள் அதிகப்படியாக திரண்டதால் அவர்களை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். படக்குழு சார்பாக அந்த இடத்தில் தனியார் பாதுகாவலர்களை நியமித்து இருந்தனர். நயன்தாராவை பார்க்க வந்த மக்களை அவர்கள் தடுத்து நிறுத்தியதால், பொது மக்களுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.