கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின் இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில் சஞ்சய் தத், பிரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கொரோனா நெருக்கடிநிலை காரணமாக இப்படத்தின் பணிகளைத் திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் எழுந்தது. படப்பிடிப்பு பணிகளைத் தொடங்குவதற்கு கிடைத்த அனுமதியையடுத்து, படத்தின் பணிகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கே.ஜி.எப் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னரே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில், படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை கடந்த மாதம் படக்குழு வெளியிட்டது. அதன்படி, படத்தின் டீசரானது நடிகர் யாஷ் பிறந்தநாளான ஜனவரி 8 ஆம் தேதி அன்று காலை 10.18 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்தது.கே.ஜி.எஃப் 2’ மலையாள உரிமையை நடிகர் பிரித்விராஜ் கைப்பற்றியுள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில்,”“நான் கே.ஜி.எஃப் படத்தின் மிகப்பெரிய ரசிகன். நாட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டப் படங்களில் ஒன்றை நான் வழங்குவதற்கான பாக்கியத்தைப் பெறுவதை விட சிறந்த வழி எதுவும் இல்லை. பிரித்விராஜ் புரடொக்ஷன் ‘கே.ஜி.எஃப் 2’ வழங்குவதை பெருமைக்கொள்கிறது.உங்களைப் போல லட்சக்கணக்கான ரசிகர்கள் போலவே நானும் ராக்கியை காண ஆவலில் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.