இசையமைப்பாளராக இருந்து விஜய் ஆண்டனி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். அதனையடுத்து இவரின் நடிப்பில் கடைசியாக வெளியாகிய திரைப்படம் கொலைகாரன். இந்த படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
அதனையடுத்து இயக்குனர் அனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக்கி வரும் படம் “கோடியில் ஒருவன்”. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மீக நடித்துள்ளார். இன்பினிட்டி பிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்ன இசையமைத்துள்ளார். அண்மையில் கோடியில் ஒருவன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. வித்தியாசமான அரசியல் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
கோடியில் ஒருவன் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி வல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், தற்போதுபடத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. “நான் வருவேன்” என தொடங்கும் இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகிறது.