நாளை வெளியாக இருந்த நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ பட ரிலீஸ் தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ’மாநாடு’ திரைப்படம் பல்வேறு போராட்டங்கள், சிம்புவால் ஏற்பட்ட தடங்கல்கள் எல்லாம் தாண்டி வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், சில காரணங்களால் தீபாவளி அன்று ரிலீஸ் இல்லை என அறிவிக்கப்பட்டது. பின்னர் நவம்பர் 25 ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்படம் நாளை வெளியாகவிருந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படம் மீண்டும் தள்ளி செல்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2 நாட்களாக இப்படத்திற்கு ஆன்லைன் புக்கிங் நடந்து வந்தது. பல தியேட்டர்களில் 2 நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மாநாடு ரிலீஸ் மீண்டும் தள்ளி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.