மும்பை:-
திறைத்துறையை விட இசைத்துறையிலும் மாஃபியாக்கள் உள்ளனர் என்று பாடகி மோனாலி தாக்கூர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
தகுதி இல்லாதவர்களை, சொந்த பந்தங்கள் மூலமாக பாலிவுட் திரைத்துறையை ஆக்கிரமித்து உள்ளார்கள் என்ற Nepotism தொடர்பாக விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் இசைத்துறையிலும் மாபியாக்களின் ஆதிக்கம் உள்ளதாக மற்றொரு விவாதம் எழுந்துள்ளது.
திரைப்படத்துறையை விட இசைத்துறையில் ஒரு பெரிய மாஃபியா கும்பலே உள்ளதாக சோனு நிகாமின் குற்றம்சாட்டினார். இவரின் குற்றச்சாட்டை தேசிய விருது பெற்ற பாடகி மோனாலி தாக்கூர் மற்றும் அட்னன் சமி ஆகியோர் ஆதரித்துள்ளார்.
இதுகுறித்து சோனாலி தாக்கூர் கூறுகையில்:-
இசைத்துறையில் திறமையானவர்கள் மதிக்கப்படுவதில்லை, திறைமையான இசைக்கலைஞர்களை எறும்புகளைப் போல் நசுக்கப் படுகிறார்கள். மேலும் பாலிவுட்டில் நிலவும் இத்தகைய போக்கு தனக்கு பிடிக்கவில்லை என்றும், இதன் காரணமாக இனி திரைப்பட பாடல்களில் பாடப்போவதில்லை என்று பாடகி மோனாலி தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பாலிவுட் திரையுலகில் மிகப்பெரும் புயலை கிளப்பி உள்ளது. தற்பொழுது இசைத் துறையிலும் மற்றொரு புயல் கிளம்பியுள்ளது.