இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். இவர் தமிழ் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை இசையமைத்து தன்னுடைய இசையால் உலக ரசிகர்களை தன்பக்கம் கட்டிபோட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இன்று இவரின் தாயார் கரீமா பேகம் உயிரிழந்துள்ளார்.
ஏ.ஆர் ரகுமான் 9 வயதிலேயே இவரின் தந்தை ஆர்.கே சேகர் இறந்துவிட்டார். அதனையடுத்து தாய் கரீமா பேகம் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். தன்னுடைய சாதனைகளுக்கு எல்லாம் வகையில் தன் தாயார் உதவியுள்ளதாக அடிக்கடி சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மை காலமாகவே இவரின் தாயார் உடல்நல குறைவால் சிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். தற்போது சினிமா துறையினரும் , பல்வேறு பிரபலங்களும் இவரை தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#tamilthisai #arraham #rahmanmotherpassedaway