தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மிஸ்கின், இவர் முகமூடி, துப்பறிவாளன், பிசாசு போன்ற பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அதனையடுத்து மிஸ்கின் கடைசியாக ‘சைக்கோ’ என்ற படத்தினை உருவாக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றது.
அதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆகையால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தது. பின்பு இயக்குனர் மிஸ்கின் அந்த தகவலை உறுதி செய்திருந்தார்.
அதன்பின் மிஸ்கின் பிசாசு 2 படத்தின் பணிகள் தொடங்கியுள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இப்படத்திற்கு, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். ராக்போர்ட் எண்டர்டைன்மென்ட் சார்பில் டி.முருகானந்தம் தயாரிக்கிறார்.
அண்மையில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ‘பிசாசு 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கௌரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில படங்களில் விஜய் சேதுபதி, கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தாலும், இப்படத்தில் அவர் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்படக்கூடியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.