இயக்குனர் அஸ்வின் சினிமா துறையில் நயன்தாரா நடிப்பில் உருவான ‘மாயா’, டாப்ஸி நடிப்பில் உருவான ‘கேம் ஓவர்’ ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி மோசடி வேலைகள் நடப்பதாக நடப்பதால் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், “இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலி ஐடியின் மூலம் என் பெயரைப் பயன்படுத்தி ஒருவர் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. அவர் அனைவரிடமும் புகைப்படங்கள் மற்றும் தொலைபேசி எண் கேட்டு வருகிறார். இதுபோன்ற உரையாடல்களில் ஈடுபடும் முன் உறுதிசெய்துக் கொள்ளுமாறு அனைத்து நடிகர்களிடமும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய அதிகாரப்பூர்வனமா ஐடியை வெளியிட்டு அந்த நபர் சிலரிடம் உரையாடிய பதிவுகளையும் இணைத்துள்ளார்.