சசிகுமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பிறகு குட்டிப்புலி, நாடோடிகள், பிரம்மன், கிடாரி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சசிகுமார்.
அதனையடுத்து இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நாடோடிகள் 2. இந்தப்படத்தினை இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிருந்தார். இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்நிலையில் நடிகர் சசிகுமார் இயக்குனர் அனீஸ் இயக்கத்தில் பகைவனுக்கு அருள்வாய் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கதாநாயகிகளாக பிந்துமாதவி, வாணி போஜன் நடிக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து நாசர், சதிஷ், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்தினை 4 மங்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பகைவனுக்கு அருள்வாய் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் நடிகை பிந்துமாதவி கையில் துப்பாக்கியுடன் மாஸ் தோற்றத்தில் உள்ளார். தற்போது இதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.