சினிமா

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தம் ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது  பொன்னியின் செல்வன். இப்படம்  எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, சரத்குமார், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தினை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டே இப்படத்தின் பணிகள் தொடங்கிய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனையடுத்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் படக்குழு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்தி முடித்து. படத்தின் 80 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பை ஜெய்ப்பூரில் நடத்தவுள்ளது.

ALSO READ  3 சர்வதேச விருதுகளை வென்ற 'மகாமுனி' திரைப்படம் :

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை படக்குழு நிறுத்தியுள்ளது. இந்தியாவில் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

#PonniyinSelvan #Manirathnam #Karthi #Vikram #Amithabatchan #ishwaryaRai #jeyamRavi #Cinema #keerthysuresh #cinema #Cinemaupdate #Cinemanews #CineUpdate #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சல்மான் கான் 6.9 கோடி நிதியுதவி….

naveen santhakumar

நடிகை நயன்தாராவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி :

Shobika

சூர்யாவுடன் இணையும் ரம்யா பாண்டியன் !

News Editor