மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
கர்ணன் படம் ஏப்ரல் 9 தேதி வெளியாகும் என அறிவிக்கப்ட்டுள்ள நிலையில் படத்தை விளம்பரம் படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது படக்குழு. அண்மையில் வெளியான “கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரௌபதையின் முத்தம் ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்று படத்தின் மீதான எதிர்பார்புகளை கூட்டியுள்ளது.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த பிரபு என்பவர் கர்ணன் படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் “கர்ணன்” படத்தில் இடப்பெற்றுள்ள “பண்ணாடர்த்தி” பாடல் குறிப்பிட்ட சமுதாயத்தினரை காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் அந்த பாடலை படத்தில் இருந்தும் யூடியூபில் இருந்தும் நீக்க வேண்டும், அதுவரை “கர்ணன்” படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமைர்வு திரைப்பட தணிக்கை குழு தலைவர், கர்ணன் படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ், படத்தின் தயாரிப்பாளர் தாணு, பண்டாரத்தி பாடலை வெளியிட்ட யூடியூப் சேனல் ஆகியோருக்கு நோடீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை வரும் ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் நீதிமன்றம் வழக்கை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் வெளியாகுமா என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#karnan #mariselvaraj #dhanush #karnantamilmovie #cinema #cineupdate #cinematrending #tamilthisai #maduraihighcourt #