விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது.
இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கி, தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ஆல்யா – சஞ்சீவ்விற்கு “ஐலா” என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தங்களது திருமணம் குறித்து பேசிய சஞ்சீவ், ” சீரியலில் பொய்யாக நடித்தவருடன் திருமணம் செய்து வைக்க முடியாது, என ஆல்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் நாங்கள் முறைப்படி ஆல்யாவை பெண்கேட்டு சென்றோம்.
ஆனால், வெவ்வேறு மதம் என்பதால் ஒப்புக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் ஆல்யா எனக்காக ஸ்ட்ராங்காக பேசினாள், இருந்தாலும், அவர்கள் ஒப்புக்கொள்ளததால் நாங்கள் வேறு வழியின்றி காதல் திருமணம் செய்துகொண்டோம் என சஞ்சீவ் கூறினார்.