விஜய் டிவி ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்த போது ஆல்யா மானசா – சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில் நேற்று ஆல்யா மானசாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதை அதிகாரபூர்வமாக ஆல்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் சஞ்சீவ் அறிவித்துள்ளார்.
“எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். உங்களின் ஆசீர்வாதம் வேண்டும். தாய் மற்றும் மகள் இருவரும் நன்றாக இருக்கின்றனர்.பாப்பு குட்டிக்கு குட்டி பாப்பு குட்டி” என குழந்தையா பற்றி மகிழ்ச்சியாக பேசியுள்ளார் சஞ்சீவ்.
சில நாட்களுக்கு முன் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
தற்போது சஞ்சீவ் அல்யா மானசா ஜோடிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் ஒரு புதிய BMW காரை வாங்கியுள்ளனர். அது பற்றி ஆல்யா மானசா தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்திருந்தார்.
“Totally excited. எங்கள் வாழ்க்கையில் அடுத்த பெரிய படி இது” என கணவர் சஞ்சீவுக்கு நன்றி கூறியிருந்தார் ஆல்யா மானசா.