பிரம்மாண்ட படமான ‘பாகுபலி’ வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் s.s.ராஜமௌலி இயக்கி வரும் படம் “RRR” என்று அழைக்கப்படும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது, இந்த வருட ஜனவரி மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு பணிகள், தற்போது மீண்டும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆகையால் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றை ஹைதராபாத்தில் படமாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து சில முக்கிய காட்சிகளைப் படமாக்கி வந்தது படக்குழு.
அண்மையில் படத்தின் இறுதிக்கட்ட சண்டை காட்சிகளை படமாக்கி வருவதாக இயக்குனர் ராஜமௌலி கூறிருந்தார். இந்நிலையில் ‘RRR’ படத்தில் இருந்து அப்டேட் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகும் என கூறியிருந்தது படக்குழு.
அதன்படி படக்குழு தற்போது படத்தின் அப்டேட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. அதில், ” அக்டோபர் 13 ஆம் தேதி ‘RRR” படம் திரையரங்கில் வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது. இத்தகவலை பார்த்த உலக சினிமா ரசிகர்கள் தற்போதில் இருந்தே இணையத்தில் கொண்டாட தொடங்கியுள்ளனர்.