தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனக்கு 7 சகோதரி உள்ளதாகவும் தனது பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவர்களை காப்பாற்ற தான் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து வருவதாகவும் கூறினார். மேலும் அதில் வரும் வருமானம் போதுமானதாக இல்லை என்று தனது கஷ்டத்தை அந்நிகழ்ச்சியில் வெளிப்படுத்தினார். அதை கேட்ட நடிகை சமந்தா அவருக்கு தன் சொந்த செலவில் கார் வாங்கி தருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் நடிகை சமந்தா கொடுத்த வாக்கை காப்பாற்றி உள்ளார். அந்த பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். நடிகை சமந்தாவின் இச்செயலை பார்த்து ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பாராட்டி வருகின்றனர்.