இயக்குநர் அட்லீ ராஜா ராணி படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் அட்லீ நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என்று தொடர்ச்சியாக மூன்று வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இதன் மூலம் அட்லீ தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
அதனையடுத்து இயக்குநர் அட்லீ பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது. ஆனால் இப்படம் குறித்து எந்தவிதமான அறிவிப்பையும் படக்குழு வெளியிட வில்லை. அண்மையில் இயக்குநர் அட்லீ இப்படத்தின் முதற்கட்ட பணிகளில் தனது உதவி இயக்குநர்களுடன் ஈடுபட்டிருந்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் இயக்குநர் அட்லீ நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கும் படத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்துள்ளதால் வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நடிகர் ஷாருக்கான் தற்போது இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் ‘பதான்” படத்தில் நடித்து வருவதால் இப்படத்தின் பணிகள் முடிந்தவுடன் அட்லீ படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
#Atlee #Shahrukkhan #Sharukhan #Newmovie #Bollywood #BOllywoodCinemas #Cinama #Vijay #RajaRani #TamilTHisai