திரையுலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றுக்கு முன்னணி நடிகை ஒருவரும் ஆளாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவில் நாள்தோறும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று திரையுலகினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் படப்பிடிப்பு, டப்பிங் போன்ற பணிகளுக்காக வெளியே செல்லும் நடிகர்,நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் அடுத்தடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலக நாயகன் கமல் ஹாசன், வைகைப் புயல் வடிவேலு, இயக்குநர்கள் டி.பி.கஜேந்திரன், சுராஜ், நடிகைகள் த்ரிஷா மீனா, நடிகர்கள் சத்யராஜ், மகேஷ்பாபு, இசையமைப்பாளர் தமன் என கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
தற்போது தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷோபனாவிற்கு தொற்று உறுதியாகியுள்ளது. தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஷோபனா, “எல்லாம் பாதுகாப்பு நடைமுறைகளையிம் மேற்கொண்டும் எனக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டது. எனக்கு மூட்டுகளில் வலி ஏற்பட்டது. தொண்டையில் கரகரப்பு இருந்தது. பின்னர் தொண்டை கரகரப்பு இருந்தது. பின்னர் தொண்டை புண்ணாக மாறியது.
ஆனால் அது முதல் நாள் மட்டும்தான். பின்னர் எனது அறிகுறீகள் மெல்ல குறையத் தொடங்கின. நான் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அது என்னை நோய் பாதிப்பில் இருந்து பாதுகாத்துள்ளது. அதனால் எல்லோரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன் “ என்று தெரிவித்துள்ளார்.