நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் இவர் அறிமுக இயக்குனர் பிரமோத் சுந்தர் இயக்கம் கலியுகம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார். புதுமையான கதைக்களம் கொண்ட ஹாரர் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.
இந்தப் படத்தை ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ப்ரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கே.எஸ். ராமகிருஷ்ணா பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இந்நிலையில் நேற்று கலியுகம் படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தப் பூஜையில் கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி படக்குழுவினர் பங்கேற்றனர்.
மேலும் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தவுடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தரப்பிலிருந்து கூறப்படுகிறது.