இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸால் பொதுமக்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோட் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர்கள் நதீம் சைஃபி மற்றும் ஷ்ரவன் ரத்தோட். இவர்கள் இருவரும் இணைந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், இவர்களில் ஒருவரான ஷ்ரவன் ரத்தோட், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த திங்கட்கிழமை மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காலமானார். இவரின் மறைவுக்கு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.