சினிமா

‘மாநாடு’ படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் கருத்து! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர்  சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அவரை தொடர்ந்து படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன், பிரேம்ஜி , எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர்கள் நடித்த் வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

மாநாடு திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.  அண்மையில் நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு மாநாடு படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.  இப்படம் தொடர்பாக எஸ்.ஏ சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “சிம்புவுக்கு இது ஒரு அழுத்தமான நல்ல கமர்ஷியல் படமாக மாநாடு இத்திரைப்படம் இருக்கும், ஒரு நல்ல கருத்தை எந்த அளவுக்கு சுவாரசியமாக சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு சொல்லி இருக்கிறார் இயக்குனர். பெரிய பெரிய கருத்துக்களை எல்லாம் போறபோக்கில் காமெடியாக சொல்லிவிடுவார் இயக்குனர் வெங்கட் பிரபு.

ALSO READ  திரைப்படங்களில் வில்லன்கள் ஐஃபோன்களை பயன்படுத்த கூடாது - ஆப்பிள் நிறுவனத்தின் புது விதிமுறை

மேலும் கூறிய அவர், இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், என்னை சுற்றி ஆபத்து இருக்கும். ஆனால் அது எனக்கே தெரியாது, இந்தமாதிரியான கதாபாத்திரத்தில் தான் நான் நடித்துள்ளேன். மாநாடு படம் இன்றைய சூழலுக்கு தேவையான படம். நான் படங்களை தேர்வு செய்துதான் நடிக்கிறான். அந்தவகையில் மாநாடு படத்தில் எனது கதாபாத்திரம் பிடித்து  போகவே அதில் நடித்துள்ளேன்” என கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மூன்றாவது முறையாக சிம்பு, கவுதம் மேனன் படத்தில் இணைத்தஏ.ஆர்.ரகுமான் !

News Editor

400 ரூவா கேக்க குடுத்துபுட்டு…. 4000ரூவா புடுங்கிடுச்சு….. நான் பெத்த புள்ளைங்க:சூரி

naveen santhakumar

“தளபதி 65” படத்தில் வில்லனாக நடிக்கிறாரா  நவாஸுதீன் சித்திக் !

News Editor